32 வயதேயான பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

32 வயதேயான பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை!

 


ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான முர்ஸல் நபிஷடா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்த துப்பாக்கி சூட்டில் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் அவரது சகோதரர் உட்பட இருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


32 வயதான முர்சல் நபிஷடா, 2021ஆம் ஆண்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய பின்னரும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.


அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு காணப்பட்ட போதிலும் அதனை நிராகரித்திருந்தார்.


தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பொது விடயங்களில் பெண்களின் பங்கு தடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் முர்சல் நபிஷடாவின் கொலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள ஆப்கானிஸ்தான் காவல்துறை பிரதானி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.