advertise here on top
Join yazhnews Whatsapp Community

பயன்படுத்த தடை செய்யப்பட்ட பல மோட்டார் சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் கைது!

உதிரிப் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட (பொருத்தப்பட்ட) அதிக இயந்திர திறன் கொண்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஹெனேகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயது மற்றும் 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்களில் மூன்று BMW ரகமும் மூன்று டுகாடி ரக மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.  ஒருவரிடமிருந்து 05 சைக்கிள்களும் ஒன்று மற்றையவரிடமிருந்து ஒரு சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.