சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்!


2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


தங்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2021 விடைத்தாள்களின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்:


பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.


அல்லது DOE மொபைல் பயன்பாடு மூலம், அல்லது https://onlineexams.gov.lk/eic எனும் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


மேலதிக விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 785231 / 0112 785216 / 0112 784037 ஊடாக மேற்கொள்ளலாம். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.