இன்று முதல் கொவிட் விதிமுறை சட்டங்கள் பல நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் கொவிட் விதிமுறை சட்டங்கள் பல நீக்கம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் சட்டங்கள் இன்று (07) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தமக்கு கோவிட் தொற்று இல்லை என்பதை சமர்ப்பிக்க PCR பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்கும் சட்டம் இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளைப் பெற்றதற்கான சான்றிதழும் இன்றிலிருந்து கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.