பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!


உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


அந்த வகையில், தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.


இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ. 15 லட்சத்து 30 ஆயிரத்து 866 கோடி ஆகும். இது ஏறக்குறைய எலான் மஸ்க்கை விட ரூ. 3 ஆயிரத்து 295 கோடி அதிகம்.


சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 530 கோடியை அதில் முடக்கினார். அதனால் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.


இதனால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ. 16.47 லட்சம் கோடிக்கு கீழே சென்றுள்ளது. எனினும், மஸ்க் தற்போது டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங் மற்றும் தி போரிங் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் உரிமையாளராகவும் உள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.