வளர்ப்பு நாய் பாலியல் துஷ்பிரயோகம்; குற்றச்சாட்டுகளுக்கு ஆஷு மாரசிங்கவின் பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வளர்ப்பு நாய் பாலியல் துஷ்பிரயோகம்; குற்றச்சாட்டுகளுக்கு ஆஷு மாரசிங்கவின் பதில்!


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.


"எனது கட்சிக்காரர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பாக தவறான வீடியோ மற்றும் படங்கள் ஊடக சந்திப்பொன்றில் வெளியிடப்பட்டுள்ளன" என்று பேராசிரியர் அஷு மாரசிங்கவுடன் CIDக்கு வந்த சட்டத்தரணி பிரவி கருணாரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக, தற்போதுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் தனது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாக சட்டத்தரணி பிரவி கருணாரத்ன தெரிவித்தார்.


"எனது கட்சிக்காரரருக்கும் ஒரு பெண்ணுக்கும் அவர்கள் இயக்குநர்களாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் தகராறு ஏற்பட்டது, மேலும் சர்ச்சை தொடர்பாக எனது வாடிக்கையாளரிடம் இருந்து பெரும் தொகை கோரப்பட்டது, இந்த அச்சுறுத்தல் அதன் பின்னணியில் வந்தது" என்று அவர் மேலும் கூறினார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பேராசிரியர் மாரசிங்கவின் முன்னாள் காதலர் என கூறிக்கொள்ளும் பெண் ஒருவருடன் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன், வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பேராசிரியர் மாரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.


“இந்த பொய்யான சம்பவம் இப்போது நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது. எனவே இது குறித்து நான் மேலும் கருத்து தெரிவிக்கமாட்டேன் மேலும் எனது சட்டத்தரணி அனைத்து விவரங்களையும் விளக்குவார்” என பேராசிரியர் மாரசிங்க இன்று CID வளாகத்திற்கு அருகில் தெரிவித்தார்.


பேராசிரியர் மாரசிங்க தனது ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து நேற்று இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.