advertise here on top
Join yazhnews Whatsapp Community

கடுமையான நிபந்தனைகளுடன் நிறைவேற்றப்பட்ட கசினோ வர்த்தக ஒழுங்குமுறை சட்டம்!

கசினோ வர்த்தக ஒழுங்குமுறை சட்டம் கடுமையான நிபந்தனைகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அரச நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2023.09.30 ஆம் திகதிக்குள் நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்று உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

அவ்வாறே வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.