கால்நடை மற்றும் இறைச்சி போக்குவரத்து தடை இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கால்நடை மற்றும் இறைச்சி போக்குவரத்து தடை இரத்து!


மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசெம்பர் 08, 09ஆம் திகதிகளில் கால்நடைகள் திடீரென உயிரிழந்ததையடுத்து மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் எடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி தடை விதித்திருந்தார்.


ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் எந்த நோய்த் தொற்றினாலும் கால்நடைகள் உயிரிழக்கவில்லை என்றும் குளிர் காரணமாகவே உயிரிழந்தாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இறைச்சி மற்றும் விலங்குகளின் போக்குவரத்துக்கு நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.