advertise here on top
Join yazhnews Whatsapp Community

கொலை குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிணை!


கொலைகள் மற்றும் சதிச் செயல்கள் செய்தமை குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலக உறுப்பினரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் இம்ரானை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.


வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


கொலைகள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 4 நீதிமன்றங்களில் சந்தேகநபருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


டுபாயில் இடம்பெற்ற பாதாள உலக உறுப்பினர் மாகந்துரே மதுஷின் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.