ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு கையொப்பமிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு கையொப்பமிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தினை பதிவு செய்துள்ளார்.

கடந்த நவம்பர் 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று (08) பிற்பகல் வாக்கெடுப்பு இடம்பெற்று 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.