நாட்டில் ஏன் இவ்வாறு குளிர்? காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஏன் இவ்வாறு குளிர்? காரணம் இது தான்!

குளிரான காலநிலை நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ளது.

நாடு முழுவதும் வீசும் காற்றின் வேகம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பல பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் (திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவில்) நேற்று பிற்பகல் 11:30 இற்கு நிலைகொண்டுள்ள "மண்டவஸ்" சூறாவளியானது வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, அட்சரேகை 10.6N மற்றும் தீர்க்கரேகை 82.3E க்கு அருகில் அமைந்துள்ளது.

மேலும் இன்று நாட்டின் பல பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

வட மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதுடன், மேலும் சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. 100 மிமி இற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்கள் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.