ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மரணத்தை கருத்தில் கொண்டு இறைச்சி பரிசோதனைகளை அதிகரிக்க இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​உரிய அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்யும் சம்பவங்கள் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நாட்களில் இறைச்சி உண்பதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட முத்திரையுடன் கூடிய இறைச்சியை மாத்திரமே நுகர்வோர் கொள்வனவு செய்ய வேண்டுமென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.