வாளிக்குள் விழுந்து பலியான ஒன்றரை வயது குழந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாளிக்குள் விழுந்து பலியான ஒன்றரை வயது குழந்தை!


யாழ். ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தவேளை குறித்த குழந்தை விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னர், திடீரென குழந்தையை காணாதமையால் பெற்றோர் தேடிய வேளை குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.


இதையடுத்து, உடனே குழந்தையை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.