நாட்டைச் சூழவுள்ள “மண்டௌஸ்” புயலின் தற்போதைய நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டைச் சூழவுள்ள “மண்டௌஸ்” புயலின் தற்போதைய நிலை!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த “மண்டௌஸ்” புயல் இன்று (10) காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவைக் கடந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், டிசம்பர் 10 பிற்பகலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, நாட்டின் காலநிலை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளின் தாக்கம் படிப்படியாகக் குறையும்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது காற்று வீசும். மணித்தியாலத்திற்கு  40 கிலோ மீற்றஎ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.