மின்சாரம் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான புதிய செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சாரம் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான புதிய செய்தி!


மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை, அத்துடன் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வந்தன.


இதனையடுத்து இது தொடர்பான விளக்கத்தை வழங்கவே இன்றைய ஊடகச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.


காலநிலை மற்றும் வானிலையை அடிப்படையாகக் கொண்ட மின்கட்டணத் திருத்த பொறிமுறையொன்று அவசியம் என 2016 ஆம் ஆண்டு முதல் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகிறது.


இலங்கை, நீர்மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் திருத்தம் அது சார்ந்ததாக இருக்க வேண்டும். அதன்படி, ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்து வருகிறது.


முன்னதாக 2016 முதல் 2021 வரை எந்த கட்டண திருத்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை.


நான் கடந்த வருடம் பதவியேற்றேன். அதன்போது மின்சார சபை நட்டத்தில் இருப்பதை அவதானித்தமையினால் கட்டணத்திருத்தம் தொடர்பான யோசனையை கடந்த வருடம் முன்வைத்தேன். அதன்படி, கட்டணமும் அதிரிக்கப்பட்டது.


தற்போதைய, அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் காலநிலை மாற்றத்துடன் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.


மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறுபடுகிறது. எனினும் கட்டணத்தை அதிகரிப்பதால் அதனை செய்யமுடியாது என்று ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.