நாட்டில் இளைஞர் சமூகம் HIV/AIDS இனால் பாதிக்கப்படும் அவதானம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இளைஞர் சமூகம் HIV/AIDS இனால் பாதிக்கப்படும் அவதானம் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த மூன்று காலாண்டுகளில் 429 நபர்கள் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக சுகாதார நிபுணர் டாக்டர் ஜானக வேராகொட தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண் தரப்பிலிருந்து அதிகம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம், 01 பெண்ணுக்கு 5 ஆண்கள் என்ற நோய்த்தொற்று விகிதமாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அது 01 பெண்ணுக்கு 07 ஆணாக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட 429 பேரில் 148 பேர் 15-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்றும் அந்த 148 பேரில் 8 பேர் மாத்திரமே பெண்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்தார். இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.