EXCLUSIVE: காதி நீதிமன்ற விண்ணப்ப காலம் நீடிப்புச் செய்தி தொடர்பில் வெளிவந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

EXCLUSIVE: காதி நீதிமன்ற விண்ணப்ப காலம் நீடிப்புச் செய்தி தொடர்பில் வெளிவந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு!

காதி நீதிமன்ற வெற்றிடங்களுக்காக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இவ்விண்ணப்ப கால முடிவுத் திகதி எதிர்வரும் 4 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இதற்கிடையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் மற்றும், முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் விண்ணப்ப காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இது போலியான செய்தியாகும்.

காதி நீதிமன்ற விண்ணப்பம் அவ்வாறு நீடிக்கப்படவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் இருபத்து ஒரு இடங்களில் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப் படவில்லை என்ற செய்தியும் தவறானதாகும் எனவும், அவர் தெரிவித்தார்.

விண்ணப்ப முடிவுத் திகதி பூர்த்தி அடைந்ததின் பின்பே விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் எனவும், 21 ஊர் பெயர்களை சுட்டிக் காட்டி உலாவரும் செய்தி உறுதிப்படுத்தப் பட்டாதவை எனவும் அவர் மேலும் தெரிவிதார்.

எனவே விண்ணப்பிக்க காத்திருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளுவது சிறந்ததாகும்.

( பேருவளை ஹில்மி )

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.