![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhttihfSmMgn3cNZYe_OZ6eFHtI7CwjMQcVpmTmEvOdKJOdhvumylsiJdRZSUVoZu5XLlJKirqMjD52RGzt1j0-SJLT248rZMYJxTaUMs2cPPIsyMiM9wu59i4eoN1dNE_ESgmQjASSYHmGlKsl-y0udvTdlgiimjrqruDd_j7Lxm7ciRMjfajsPRa_-w/s16000/630B9681-F794-4089-9DE8-FD850F73079B.jpeg)
இவ்விண்ணப்ப கால முடிவுத் திகதி எதிர்வரும் 4 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
இதற்கிடையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் மற்றும், முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் விண்ணப்ப காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இது போலியான செய்தியாகும்.
காதி நீதிமன்ற விண்ணப்பம் அவ்வாறு நீடிக்கப்படவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் இருபத்து ஒரு இடங்களில் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப் படவில்லை என்ற செய்தியும் தவறானதாகும் எனவும், அவர் தெரிவித்தார்.
விண்ணப்ப முடிவுத் திகதி பூர்த்தி அடைந்ததின் பின்பே விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் எனவும், 21 ஊர் பெயர்களை சுட்டிக் காட்டி உலாவரும் செய்தி உறுதிப்படுத்தப் பட்டாதவை எனவும் அவர் மேலும் தெரிவிதார்.
எனவே விண்ணப்பிக்க காத்திருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளுவது சிறந்ததாகும்.
( பேருவளை ஹில்மி )