நாட்டில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில்!

இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதால் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பலரும் கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், ஹில்டன் மற்றும் ஏனைய நிறுவனங்கள் டொலரில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் பூஜ்ஜிய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 03 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஓய்வூதிய ஊழியர் சேமலாப நிதியம் 50% நலிவடைந்துள்ளதாகவும் இதன் மூலம் அதனை மேம்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தான் மக்களைப் பார்க்கிறேனே தவிர கட்டிடங்களை அல்ல என்றார்.

கொழும்பில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.