சந்தேகத்திற்கிடமான பெட்டிக்குள் பல கோடி பெறுமதியுள்ள போதைப் பொருட்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சந்தேகத்திற்கிடமான பெட்டிக்குள் பல கோடி பெறுமதியுள்ள போதைப் பொருட்கள்!

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுங்க திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி, இரண்டு கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள அட்டைப் பெட்டியில் இருந்து 4,956 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு இந்த போதைப்பொருள் கையிருப்பு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் தனிப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் அதன் பெறுமதி ரூ. 495 இலட்சம் இற்கும் அதிகம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.