நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மீண்டும் கட்டுப்பாடு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மீண்டும் கட்டுப்பாடு?

நாடளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் வைரஸ் நிலைமைக்கு மத்தியில், கொரோனா வைரஸும் மீண்டும் தலைதூக்கி வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் வரும் வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது கொரோனா வைரஸுக்கு சிறப்பு சுகாதார விதிகளை விதிக்கவோ எந்த தயாரிப்பும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு சுகாதார அமைச்சுக்கு எந்த திட்டமும் இல்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.