செஸ் வரி அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சகம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செஸ் வரி அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சகம் விளக்கம்!


600க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி வீதத்தில் நேற்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 120 பொருட்களில் எந்தப்பொருட்களின் விலையும் அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுங்கம் அல்லாத வரிகள் படிப்படியாக நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீட்டு உரையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், செஸ் வரி 3 ஆண்டுகளிலும் துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி 5 ஆண்டுகளிலும் படிப்படியாக நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி பாதீட்டு உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.