பெண்களை பணிக்கு அனுப்பும் போர்வையில் மனிதக் கடத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்களை பணிக்கு அனுப்பும் போர்வையில் மனிதக் கடத்தல்!


வெளிநாடுகளுக்கு பெண்களை பணிகளுக்கு அமர்த்தும் போர்வையில் நாடு முழுவதிலும் மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கும், தரம் பாராமல் தண்டனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் மட்ட முன்னேற்ற ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித கடத்தலில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் சோதனைகளை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அத்துடன், மனித கடத்தல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.