ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில்


 '21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு நாளை (7) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில் நடைபெறும். 

அமைப்பின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெறும் இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி - உதவிப் பணிப்பாளர் ஜுனைட் எம். ஹாரிஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர் என போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் முல்லை முஸ்ரிபாவின் ஏற்பாட்டில்,  
நடைபெறும் இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தவசிப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரப் பொறுப்பாளர் பானூ பிரகாஷ் மற்றும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூஸிற்காக எம்.எஸ்.எம்.ஸாகிர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.