முறையற்ற தொடர்பு; 24 வயது இளைஞன் கணவரால் அடித்துக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முறையற்ற தொடர்பு; 24 வயது இளைஞன் கணவரால் அடித்துக் கொலை!


இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவரின் கொலை சம்பவம் ஒன்று நேற்று (12) பதிவாகியுள்ளது.


சனிக்கிழமை அதிகாலை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு நபர் ஒருவர் அடித்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.


ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1990 அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்றைய தினம் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


பாதிக்கப்பட்ட நபருக்கு திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், பெண்ணின் கணவர் அவரை அடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.