![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7RdOKZMd3gTQZqFDAvT5vBiqwX69Smy0ZCBpysm9NNbLpYyiIZ05ViUCsUteEby6hY55hr_5rj2EZ4AffV2M1CmTXFpHqbMFzqMfgNeHilNJf1l4nzKdZdfxG7ttAM_Qq6BHga71OBb0vPhwb_oYKQI30eI7oTHr9lV5PCQMw4YQPSDUeMHzlNVwk/w640-h426/o.jpg)
நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்ட 2023 வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
2023 வரவு செலவுத் திட்டம் மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் சமூக நலன்கள் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை சூழலை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தும்.
2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம், புதிய உலகிற்கு ஏற்றவாறு புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்முறையானது இளைஞர்களுக்கு ஒழுக்கமான நாட்டை உறுதி செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.