advertise here on top
Join yazhnews Whatsapp Community

15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


பொலன்னறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தமது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பொலன்னறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அத்துடன், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை குறித்த தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய இச்சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொலன்னறுவை மேல்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.