14 வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டாவுக்கு போட்டித் தடை மற்றும் அபராதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டாவுக்கு போட்டித் தடை மற்றும் அபராதம்!

எவர்டனில் இளம் ரசிகரின் கையிலிருந்து கையடக்கத் தொலைபேசியைத் தாக்கியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு போட்டிகளில் தடையும், 50,000 பவுண்டுகள் ($60,000, 58,000 யூரோக்கள்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து சங்கம் (FA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று மான்செஸ்டர் யுனைடெட்டால் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது ஒரு எவ்வித அணியிலும் இல்லாத ரொனால்டோ, ஏப்ரல் 09 அன்று குடிசன் பார்க்கில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் எவர்டன் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 14 வயது சிறுவனை தாக்கியுள்ளார். 

அவர் Merseyside காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டார், அதே நேரத்தில் FA போர்த்துக்கல் வீரரின் தவறான நடத்தைக்கு குற்றம் சாட்டியது. இப்போது ஒரு சுயாதீன குழு இவருக்கு இடைநீக்கம் மற்றும் அபராதம் விதித்துள்ளது.

ரொனால்டோ எந்த நாட்டிலும் ஒரு புதிய கிளப்பில் சேரும்போது தடை மாற்றப்படும், ஆனால் கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பையில் இது பொருந்தாது, இன்று கானாவுக்கு எதிராக போர்த்துக்கல் போட்டியில் 37 வயதான அவர் இடம்பெறுகிறார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.