![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYRv3w7aokLAdQfI7TGc1TsZeG4QF3NLkcOhlg1zWsqN6nR5fVt9C6I2ODKUVUk3Ni7TdWIUpVeSCjoBWTw8Ce6YBVMYsoOaj1qw19NbU-sSQ_P4x9AuQ21oKL1ELSNAnCtu1PHOdBJNR9nwF_OHWb_M831wJOzcgMKL5ukl-HDM8kyk3yA9xroyhLyA/s16000/4321D9E1-AE50-45D1-8932-10D9629E107F.jpeg)
செவ்வாயன்று மான்செஸ்டர் யுனைடெட்டால் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது ஒரு எவ்வித அணியிலும் இல்லாத ரொனால்டோ, ஏப்ரல் 09 அன்று குடிசன் பார்க்கில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் எவர்டன் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 14 வயது சிறுவனை தாக்கியுள்ளார்.
அவர் Merseyside காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டார், அதே நேரத்தில் FA போர்த்துக்கல் வீரரின் தவறான நடத்தைக்கு குற்றம் சாட்டியது. இப்போது ஒரு சுயாதீன குழு இவருக்கு இடைநீக்கம் மற்றும் அபராதம் விதித்துள்ளது.
ரொனால்டோ எந்த நாட்டிலும் ஒரு புதிய கிளப்பில் சேரும்போது தடை மாற்றப்படும், ஆனால் கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பையில் இது பொருந்தாது, இன்று கானாவுக்கு எதிராக போர்த்துக்கல் போட்டியில் 37 வயதான அவர் இடம்பெறுகிறார். (யாழ் நியூஸ்)