எனது V8 ஜீப் இணை திருட்டு முறையில் விற்பனை செய்துள்ளனர்! -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது V8 ஜீப் இணை திருட்டு முறையில் விற்பனை செய்துள்ளனர்! -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்


மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தமக்கு சொந்தமான பிராடோ V8 ஜீப் வாகனம் கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரினால் இரகசியமாக விற்பனை செய்யப்பட்டதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமின் பிரபுருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது விளக்கமறியலில் உள்ள திலினி பிரியமாலி தனது ஜீப்பை திருடியதாக சிலர் கூறினாலும், மோசடி செய்தது சம்பந்தப்பட்ட பெண் அல்ல, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர என அவர் தெரிவித்துள்ளார்.

நன்கொடையாளர் ஒருவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற ஜீப்பை விற்கத் தயாராக இருந்தபோது, ​​இந்த எம்.பி பின்னர் பணம் கொடுத்ததன் அடிப்படையில் அதை எடுத்ததாகவும், ஆனால் பின்னர் பணம் செலுத்தாததால் விசாரணையின் போது அதை விற்றதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.