பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!


கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

UPDATE: மு. ப 10:40
குறித்த பகுதியில் உள்ள மதுபான விடுதியில் கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எனினும், அந்த நேரத்தில் மதுபான விடுதிக்கு அருகில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.