advertise here on top
Join yazhnews Whatsapp Community

டீசலின் விலை ஏன் குறைக்கப்படவில்லை? அமைச்சர் விளக்கம்!


டீசல் இறக்குமதியின் போது ஒரு ரூபா மாத்திரமே இலாபம் கிடைத்தமையினால் கடந்த விலை திருத்தத்தின் போது டீசல் விலை குறைக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் பேசிய அவர், இது பெரிய மார்ஜின் இல்லாததால், டீசல் விலையை குறைக்க முடியாது. முன்னதாக டீசலுக்கு 30 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, விலை திருத்தத்தின் பின்னரும் 1 ரூபாய் மட்டுமே லாபம் பதிவாகி வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு போதிய பணம் கிடைக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இறக்குமதியின் போது ஏறக்குறைய 70 ரூபா இலாபம் பதிவாகியதால் பெற்றோலின் விலையை குறைக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் விலையில் திருத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.