![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyencMRmaW3DqdRsHAZrl9APWuRoFdhh30Ip9r4d4xWxFxMMsrsbxqcWz_oPuizkRkrsfG73uqeI31vGH9-0dgp2JbDs-DdAUaCoTxsnNmM_v5IR0uW6F60uOve_i2azNB4Y4gd1RS0DdosGM7Hv9TNW-Rp2hPQTdw2bI05xANkHJiwX8n7evxBuF6Hw/s16000/A52DFDC5-9FE8-424E-A906-7AF70A01DFA3.webp)
வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ள பின்னணியில், இன்று விகாரைகளை இருட்டில் வைக்கும் தீர்மானத்தை கைவிடப் போவதில்லை என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தான் எதிர்பார்க்கும் அதிகபட்ச மின்சார நிவாரணம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
இந்த வப் போயா தினம் ”இருட்டு வப் போயா' என தெரிவித்த அவர், இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து வெஹர விகாரைகளின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)