தொழிலதிபராக நடித்து கோடிக்கணக்கான பணத்தை பெண்களிடம் மோசடி செய்தவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழிலதிபராக நடித்து கோடிக்கணக்கான பணத்தை பெண்களிடம் மோசடி செய்தவர் கைது!


பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


சந்தேக நபர் தொழிலதிபர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் போன்று நடித்து திருமண விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், இவரின் மோசடியில் சிக்கிய பெண்களில் பாடசாலை ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இவரே, ‘ராகுல ஜயசிங்க என்ற பெயரில் தன்னை அறிமுகம் செய்து மணமக்களின் வீடுகளுக்குச் சென்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.