சிகரெட் மற்றும் மதுபானத்தின் விலை உயர்வு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிகரெட் மற்றும் மதுபானத்தின் விலை உயர்வு!!

மதுபானத்தின் விலையும் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகை மதுபானங்களின் விலையை DCSL உயர்த்தியுள்ளதுடன், 750 ml விசேட மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டு வகையான சிகரெட்டுகளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏனைய புகையிலை பொருட்களின் விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சிகரட் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகும்.

ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரி இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.