ஆட்சி மாற்றத்தில் மாறாத நிலையான தேசியக் கொள்கை ஒன்று அவசியம்! -ஜனாதிபதி

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஆட்சி மாற்றத்தில் மாறாத நிலையான தேசியக் கொள்கை ஒன்று அவசியம்! -ஜனாதிபதி


ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் மாறாத நிலையான தேசியக் கொள்கை இலங்கைக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.


கட்டுநாயக்கவில் மருந்து உற்பத்தி நிலையமொன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 


நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி வேறுபாடுகள் இன்றி பொதுவான தேசியக் கொள்கையின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். 


"இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேசத் துறையில் அதை நிலைநிறுத்துவதற்கும் வலுவான பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியம்" என்று அவர் கூறினார். 


தேசிய சபையை மேடையாகக் கொண்டு வலுவான தேசியக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 


போட்டி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை வலுப்படுத்தும் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.