![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm4qkmi9Qd_PAMAzIIPFlMWklFa4rlQVOZYeK3JKKeKTqtDrDf_CeVx3UJ2JrSIZIe46Vuh-7BP6GI8HCzxxopMp5ZiYRux7zJJSRK-tnyWM4YyYMYmdx5PJhLKIVl7TGSKS0TeZ83v6jRzMxMsKVUatdDfFezjZmkeWgvR95QdXMmu3hnuaDhKmZ_/s16000/md_deck_16092022.webp)
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் இரவு 10.00 மணி வரை தாமரை கோபுர வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும். குறித்த இரண்டு நாட்களிலும் இரவு 11.00 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.