இந்திய இருமல் பானம் அருந்திய 66 குழந்தைகள் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய இருமல் பானம் அருந்திய 66 குழந்தைகள் உயிரிழப்பு!

உலக சுகாதார அமைப்பின் ட்விட்டர் அறிவிப்பின்படி, காம்பியாவில் 66 குழந்தைகள் காய்ச்சல், சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த சிரப் (பானம்) குடித்து இறந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் சளி, இருமலைப் போக்க இந்திய 'மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ்' மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த 4 வகையான சிரப்களை பயன்படுத்தியதால் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏழை நாடான காம்பியா நாட்டு மக்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகையைப் பெறுகிறார்கள்.

Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய 4 வகையான சிரப்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். சிரப்களை பயன்படுத்திய குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.