
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் சளி, இருமலைப் போக்க இந்திய 'மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ்' மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த 4 வகையான சிரப்களை பயன்படுத்தியதால் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏழை நாடான காம்பியா நாட்டு மக்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகையைப் பெறுகிறார்கள்.
Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய 4 வகையான சிரப்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். சிரப்களை பயன்படுத்திய குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)