advertise here on top
Join yazhnews Whatsapp Community

மொட்டு கட்சியில் இருந்து 30-40 நபர்களை எடுப்பது ஜனாதிபதியின் திறமை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 30 தொடக்கம் 40 பேர் வரை போட்டியிடத் தயாராகிறார்கள் என்றால் அது ஜனாதிபதியின் திறமை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து முப்பது நாற்பது நபர்களை அவர் பக்கம் எடுக்க ஜனாதிபதி விரும்பினால் அந்த தொகையும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், அவர்களை இந்த பக்கம் எடுக்க ஜனாதிபதி விரும்பமாட்டார் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அரசியல் முன்னேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.