2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் தினம் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் தினம் அறிவிப்பு!

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான மதிப்பெண்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் மே மாதம் நடைபெற்றது.

பரீட்சைக்குத் தோற்றிய 517,486 மாணவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்களும் 110,367 பேர் தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.