advertise here on top
Join yazhnews Whatsapp Community

கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 12 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (28) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (29) காலை 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

இதனால், கொழும்பு 2, 3, 4, 5, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டம் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர் சபை தெரிவித்துள்ளது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.