![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhov-pOMlD8bK57WKcPvT5Hnh01PQsulZBGcHWN_ukQ81oeFU6euVD007EMUBK-sT1KOS2lycvCNTT_LWr8ugY71NC2FJUvvEXi3vyDCl3mJKfU57BqAWzZiHwZITc-fQQc4_uhbNLA93XpTQnwt6B-uyRtAuOjyvR5ClhYmmP3pgl5FeBUzxtcqi_YQw/s16000/A778EFE0-F2B2-42B0-BF7A-DBDDFD54F51D.jpeg)
வெள்ளிக்கிழமை (28) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (29) காலை 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
இதனால், கொழும்பு 2, 3, 4, 5, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.
பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டம் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர் சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)