நீர் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்குள் அதனைத் தீர்க்காவிட்டால் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி இணைப் பணிப்பாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குடிநீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு தாம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் உரிய தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தாவிட்டால் இணைப்பை துண்டிக்க சபாநாயகர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட்  மாதத்தில் மாத்திரம் நீர் கட்டணம் செலுத்தாத இருபத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் விநியோகங்களை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.