சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட அறிவிப்பு!!


நலன்புரி கொடுப்பனவை பெற தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றைய தினம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதன்படி, சமுர்த்தி, முதியோர், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, பொது மக்கள் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.


தகுதியானவர்கள் தமது பிரதேச செயலகத்திற்கு தமது விண்ணப்பத்தை கையளிக்குமாறு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை வகுப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


அத்துடன், 011 2 151 481 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது 1919 துரித அழைப்பு இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பெற்று பெற்றறுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.