நாளை காலை வீதிக்கு இறங்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு கோரிக்கை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாளை காலை வீதிக்கு இறங்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு கோரிக்கை!


ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனான இலங்கை அணியினர் மற்றும் சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனான பெண்கள் அணியினர் நாளை (13) நாடு திரும்புகின்றனர்.


கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை வரவேற்க வீதிகளில் அணிவகுத்து நிற்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட ஆசிய சாம்பியன்கள் நாளை காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலிருந்து கொழும்புக்கு அணிவகுத்துச் செல்ல உள்ளனர். எனவே அவர்களை வரவேற்க ரசிகப்பெருமக்கள் தெருக்களில் வரிசையாக இருப்போம்" என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.