![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy7qGAHgo7fcEtcXKEPFqeGMURkE6InlM6sZ0On472m5ehLiJUWbMa_dLXCDi27FVspnigJIFaDda7FoA6IuoURRZTeiBHTu-GxV93fGAdovrSLrlmTo04CtinirddK95wqj2NfPqZ-a1xnckj-DQZjv3HIHuJ_uJdKNchZ4s8Yz9Ze078yw-VNc4o/s16000/hh.jpg)
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 சத வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.
இது அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்ட பொருட்களின் விலைகள் குறையும் என அதன் தலைவர் எஸ்.எம்.டி சூரியகுமார தெரிவித்தார்.
இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சந்தையில் மிட்டாய் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மிட்டாய் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி தரம் கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மலிவு விலையில் தின்பண்டங்களை வாங்குவதற்கு நுகர்வோர் பல வாரங்களாக அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அடுத்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)