காணாமற் சென்ற பல்கலை கழக மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமற் சென்ற பல்கலை கழக மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்பு!

கடந்த 16 ஆம் திகதி காணாமற் சென்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் அஞ்சனா குலதுங்க எனும் மாணவனின் சடலம், மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கன்னோருவ பிரதேசத்திற்கு அருகில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.