![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqgG5UhAmwgI68miRJ3zJ4jLTnrxEDTa8Rx-Q8IosLjcScKXyUEqKdyp48dtmPPq2XABimB0aLE7NKhf1TIdHdeQWtfxzgsj5YrhSDmBX9dNOkcSNK_mXusx__mYaz0jFQcJ5Mo1jKOdA2CX1D0Hswq7C3dJnFAt3W6DTrexqgMJTZ_KQpZ87TKAll/w640-h336/fdf.jpg)
பலப்பிட்டிய, வெல்லபாட பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் 76 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை பிரேத பரிசோதனை செய்த நீதித்துறை அதிகாரி திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். (யாழ் நியூஸ்)