“இலங்கையில் மாத்திரம் இல்லை, அமெரிக்காவில் இதே நிலைமை தான்” - பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“இலங்கையில் மாத்திரம் இல்லை, அமெரிக்காவில் இதே நிலைமை தான்” - பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச

ஒரு நாட்டின் அரச சேவை ஒழுக்கமானதாக இருக்க வேண்டும் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கு தடைவிதிப்பது நியாயமானது என்றும் அவர்கள் அரசாங்கத்திற்காக வேலை செய்கிறார்கள் மற்றும் நிர்வாக மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் உரிமைகள் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் பணிபுரியும் போது எந்தவொரு பொது ஊழியரும் சமூக ஊடகங்களை அணுக முடியாது என்றும், அவர்கள் தொலைபேசியில் என்ன செய்கிறார்கள் என்பது கூட கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்படி அமெரிக்காவில் உள்ள அரசாங்க அதிகாரிகள் தமது வேலை நேரத்தில் சமூக ஊடகங்களை அணுக முடியாது எனவும், அவர்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்தி விடயங்களை அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.