முன்னாள் ஜனாதிபதி அனுபவச் செல்வம் கொண்ட தலைவர்; அவரிடம் அனுபவங்களைப் பெற்று அதை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி அனுபவச் செல்வம் கொண்ட தலைவர்; அவரிடம் அனுபவங்களைப் பெற்று அதை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்!


நாட்டின் பொருளாதார நெருக்கடியை போக்க நாட்டைப் பொறுப்பேற்ற தலைவருக்கு கட்சி நிற அரசியலின்றி ஆதரவளித்தால் ஆறுமாத காலத்துக்குள் நாட்டின் பொருளாதாரம் சீராகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.


156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (04) நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, நாட்டின் ஜனாதிபதியாக இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலமே பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ அனுபவச் செல்வம் கொண்ட தலைவர்; அவரிடம் இருந்து அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு தான் தீவிர அரசியலில் ஈடுபட்டு அடுத்த தலைமுறைக்கு அந்த அனுபவங்களை வழங்க வேண்டும் என அனுராத ஜயரத்ன கூறுகின்றார்.


எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து முழு நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், இது குறுகிய காலப் பிரச்சினையே எனவும் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.