ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; கைதானவர்களில் ஒருவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; கைதானவர்களில் ஒருவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பைப் பேணி வந்தார்கள் எனக் கூறப்படும் சந்தேக நபர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஏனைய 29 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் இன்று (06) உத்தரவிட்டார்.


இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இவர்களில் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய 29 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


-கனகராசா சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.