ஆசிரிய இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரிய இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!


2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு கடந்த 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்தது.


இந்நிலையில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களது இணக்கப்பாடு இருந்தால் மாத்திரமே, ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவையில் ஈடுபட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.