உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலின் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலின் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியர்!


உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி இரண்டாவது இடத்துக்கு இன்று முன்னேறினார்.


60 வயதான கௌதம் அதானி சில வாரங்களுக்கு முன்னர் அப்பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்டபங்குகளின் பெறுமதி பங்குச் சந்தையில் வெகுவாக உயர்ந்தது. இதனால் அதானியின் சொத்து மதிப்பு 155.7 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.


இதனால் போர்ப்ஸ் சஞ்சிகையின் செல்வந்தர்களின் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.


அமெரிக்காவின் இலோன் மஸ்க் இப்பட்டியிலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 273.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.


புpரான்ஸின் பேர்னார்ட் ஆர்னோல்ட் மூன்றாவது இடத்திலும் அமெரிக்காவின் ஜெப் பெசோஸ் நான்காவது இடத்திலும் இருந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.